கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற ரவுடி பிடிபட்டார்

பெரம்பூர்: கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில் மதுக்கடை மூடிய பின்பு சட்ட விரோதமாக கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கொடுங்கையூர் ஆர்ஆர் நகர் பகுதியில் போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்து சுமார் 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கொடுங்கையூர் ஆர்ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சசி என்ற சசிகுமார் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர் இவர் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் உள்ளன. இதனையடுத்து சசிகுமார் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குட்கா விற்றவர் கைது:
திருவிக நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பெரம்பூர் இஎஸ்ஐ சாலை பகுதியில் குட்கா பொருட்கள் தயாரித்து விற்கப்படுவதாக திருவிக நகர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் காலை போலீசார் ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் 2 கிலோ மாவா, மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் சீவல் பாக்கு மற்றும் ஜர்தா உட்பட 5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனை விற்பனை செய்த பெரம்பூர் டீட்ஸ் கார்டன் மூன்றாவது தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார் (30) என்ற நபரை போலீசார் கைது செய்து அவர்மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

ஏரியில் பெண் சாமியார் வெட்டிக்கொலை: சென்னையை சேர்ந்தவர்?

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தவ்ஹீத் ஜஅமாத் தலைவர்கள் சந்திப்பு

பெண் தாசில்தாருக்கு மிரட்டல்; நெல்லை பெண் போலி ஐஏஎஸ் அதிகாரி சிறையில் அடைப்பு: பாஜ பிரமுகரும் கைது