ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதன்மை பணி: அருண்
ரவுடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணியாக இருக்கும் சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும்போது சென்னையில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளன. பொத்தம் பொதுவாக சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என்று சொல்லக் கூடாது. காலம் காலமாக குற்றங்கள் நடந்து வருகிறது; அதை தடுத்து கொண்டு தான் இருக்கிறோம் என்றார்.
“ரவுடிகளுக்கு புரியும் மொழியில் புரியவைக்கப்படும்”
ரவுடிகளுக்கு புரியும் வகையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். நடந்த குற்றங்களுக்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும், குற்றம் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவோம்; ரவுடிகளை ஒடுக்க வேண்டும், அவர்களுக்கு புரிவது போல் சொல்லித் தரப்படும். மேலும், திறமையான கண்காணிப்பை மேற்கொண்டாலே குற்றங்களை குறைக்க முடியும் என காவல் ஆணையர் அருண் கூறியுள்ளார்.