நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே சுனாமி குடியிருப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 2 வயது சிறுவன் உயிரிழந்தான். நாகப்பட்டினம் செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் விஜயகுமார்(45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாண்டி மீனா(40). இவர்களது 2 வயது மகன் யாசின்ராம்.
நேற்று முன்தினம் இரவு விஜயகுமார் குடும்பத்துடன் தூங்கி கொண்டு இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்தது. இதில் மேற்கூரையில் பொருத்தி இருந்த மின்விசிறியும் விழுந்தது. இதில் யாசின்ராம் மார்பு பகுதியில் மேற்கூரை சிமெண்ட் காரை விழுந்தது. பாண்டி மீனாவின் இடது பக்க கையில் மின்விசிறி விழுந்தது. இதில் குழந்தை யாசின்ராம் இறந்தது. காயமடைந்த பாண்டி மீனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.