இதனால், அஜயுடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்துள்ளார். சிறையில் இருந்து வெளியில் வந்த அஜய், அந்த இளம்பெண்ணை பலமுறை சந்தித்து, தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், இளம்பெண் மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 21ம் தேதி அடையாறு, கற்பகம் கார்டன் முதல் குறுக்கு தெருவில் அந்த இளம்பெண் தனது உறவினர் ஒருவருடன் வேலைக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அஜய், அந்த இளம்பெண்ணை பின்தொடர்ந்து வந்து, தன்னிடம் பேச வேண்டும், என மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், பயந்துபோன அந்த இளம்பெண், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சாஸ்திரி நகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த அஜய் அங்கிருந்து தப்பினார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.