காதலிக்க மறுத்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்: ரவுடி கைது

வேளச்சேரி: மீஞ்சூர், பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அஜய் (24). இவருக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு, தனது நண்பர்கள் மூலம், இளம்பெண் ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்த நிலையில் அஜய் ஒரு குற்ற வழக்கில் கைதாகி, சிறைக்கு சென்றுள்ளார். இதுபற்றி இளம்பெண் விசாரித்தபோது, அஜய் மீது பல குற்ற வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், அஜயுடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்துள்ளார். சிறையில் இருந்து வெளியில் வந்த அஜய், அந்த இளம்பெண்ணை பலமுறை சந்தித்து, தன்னை காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி வந்துள்ளார். ஆனால், இளம்பெண் மறுத்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 21ம் தேதி அடையாறு, கற்பகம் கார்டன் முதல் குறுக்கு தெருவில் அந்த இளம்பெண் தனது உறவினர் ஒருவருடன் வேலைக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அஜய், அந்த இளம்பெண்ணை பின்தொடர்ந்து வந்து, தன்னிடம் பேச வேண்டும், என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால், பயந்துபோன அந்த இளம்பெண், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சாஸ்திரி நகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த அஜய் அங்கிருந்து தப்பினார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

அற்புதமானவர் பிரதமர் மோடி.. அமெரிக்கா வரும் அவரை சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் அறிவிப்பு!!

சூரியன் குத்துக்கதிர்கள் நகருவதால் வெப்பம் அதிகரிப்பு : செப்டம்பரிலும் வெப்ப அலை ஏற்பட காரணம் குறித்து வானிலை ஆய்வாளர் விளக்கம்!!

பொள்ளாச்சியில் புதிய காவலர் குடியிருப்பு ரூ.72 கோடியில் 260 வீடுகள் நவீன முறையில் கட்ட நடவடிக்கை: அதிகாரிகள் தகவல்