Friday, June 28, 2024
Home » மாவட்டங்களில் தலா 1 பள்ளியில் ரூ.15 கோடியில் ‘ரோபோட்டிக் லேப்’: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

மாவட்டங்களில் தலா 1 பள்ளியில் ரூ.15 கோடியில் ‘ரோபோட்டிக் லேப்’: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

by Karthik Yash

சென்னை: பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பிறகு சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:
* அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் படிப்படியாக தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக 1000 மாணவர்களுக்கு மேல் படிக்கும் அரசுப் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடி மதிப்பில் உயர்த்தப்படும்.
* பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைரவிழா ஆண்டையொட்டி தேசிய அளவிலான முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரியில் ரூ.10 கோடியில் நடத்தப்படும்.
* 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத்திறன் பயிற்சி அளிக்கப்படும்.
* மாவட்டந்தோறும் தலா ஒரு பள்ளி என்ற அளவில் 38 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் ஆய்வகம் (ரோபோட்டிக் லேப்) ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.
* மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் புலன் உணர்வுத் திறன் மற்றும் நுண்தசை இயக்கத்திறன் ஆகியவற்றை மேம்படுத்த ஒரு மாவட்டத்துக்கு ஒரு பல்வகைத் திறன் பூங்கா என 38 மாவட்டங்களில் ரூ.3.80 கோடியில் உருவாக்கப்படும்.
* அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை படிக்கும் மாணவியருக்கு உடல், மனரீதியாக, சமூக ரீதியாகவும் இடைஞ்சல்்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஆசிரியர் குழுக்கள் அமைக்கப்படும். அவர்களுக்கு பயிற்சி அளிக்க அகல்விளக்கு திட்டம் ரூ.50 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.
* 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான கலைத்திருவிழா போல தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் கலைத் திருவிழா நடத்தப்படும்.
* உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக செல்லும் அரசு பள்ளி மாணவர்களின் முதல் பயணத் தொகை முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கப்படும்.
* தமிழ்நாட்டின் பண்பாடு, கட்டடக்கலை, சிற்பக் கலை, நாட்டுப்புறக் கலைகள், தனித்துவமான உணவு வகைகள், புவிசார் குறியீடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய புகைப்பட ஓவிய நூல்கள் ரூ.50 லட்சம் மதிப்பில் ‘மிளிரும் தமிழ்நாடு’ என்ற பெயரில் பரிசுப் பதிப்புகளாக வெளியிடப்படும்.
* பட்டயக்கணக்காளர் அடிப்படைத் தேர்வுக்கான நூல்கள் தமிழ் கலைச்சொற்களோடு கூடிய வெளியீடாக ரூ.30 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும்.
* இணையதள மேம்பாடு மற்றும் விற்பனை முகவர்கள் மூலமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் புத்தகங்களை விற்பனை செய்ய வசதியாக விற்பனைக்கான இணையதளம் ரூ.20 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படும்.

* திசைதோறும் திராவிடம் ரூ. 2 கோடியில் விரிவாக்கம்
நூலகத்துறை தொடர்பாக அமைச்சர் அறிவித்த முக்கிய திட்டங்கள்:
* அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வரும் சிறுவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் செலவில் நிறுவப்படும்.
* செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் மொழிபெயர்ப்பு, நூல் சுருக்கம், மறு உருவாக்கம், காணொலிகள் எழுத்தாக்கம் போன்ற புதிய சேவைகள் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழுநேரக் கிளை நூலகங்களில் வாசகர்கள் பயன்பெறும் வகையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் மூலம் ரூ. 5 லட்சம் மதிப்பில் வழங்கப்படும்.
* திசைதோறும் திராவிடம் என்ற திட்டம் ரூ. 2 கோடி மதிப்பில் பிற இந்திய மொழிகள் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi