எஸ்ஐ வீட்டில் கொள்ளை

பூந்தமல்லி: ஆவடி குமரன் நகரை சேர்ந்தவர் துரைசாமி (68). ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவருக்கு சுபாஷினி மற்றும் சுஜாதா என 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும், திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் துரைசாமி வீட்டை பூட்டிவிட்டு தாம்பரம் பகுதியில் உள்ள 2வது மகள் சுஜாதாவை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் முதல் மகளின் கணவர் பாலாஜி மாமனாரை பார்க்க வந்துள்ளார். அப்போது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. உடனே, செல்போன் மூலமாக தனது மாமனார் துரைசாமியை தொடர்ப்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். அதில், பீரோவில் வைத்திருந்த 11 சவரன் நகை திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Related posts

விளையாட்டுத்துறையில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன் : இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி உத்வேகம்

ஹத்ராஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ராகுல் காந்தி

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை படங்களில் பயன்படுத்தும் விவகாரம்: திரைத்துறையினருக்கு தேமுதிக வேண்டுகோள்