Thursday, June 27, 2024
Home » ஆவடி அருகே தனியார் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

ஆவடி அருகே தனியார் ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

by Ranjith

ஆவடி: ஆவடி அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆவடி அடுத்த மேல்பாக்கம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தியா(25). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சந்தியாவின், தந்தை நேற்று முன்தினம் மதியம் சபரிமலைக்கு சென்றதால், அனைவரும் வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்று, மதியம் 3.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பினர்.

அப்போது, வீட்டிற்குள் பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து 3 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் ஆகியவை திருடுபோய் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சந்தியா, ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் பின்புற கதவு பூட்டப்படாமல் இருந்ததால், அவ்வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள், நகை மற்றும் பணத்தை திருடிச்சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

nine + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi