கடலூர்: விருத்தாசலம் அருகே எருமனூர் கிராமத்தில் வளர்மதி என்பவரின் வீட்டில் 12 சவரன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு போனது. வளர்மதி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து நகைகள், பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். வளர்மதி அளித்த புகாரை அடுத்து நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தினர்.