இந்நிலையில், இச்சாலை குறுகலாக இருப்பதால் நடந்து செல்லும் மக்களும், வாகனத்தில் செல்பவர்களும் சிரமத்துக்கிடையே பயணம் செய்து வருகிறார்கள். இச்சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் பின்புறம், சாலை வளைவில் உள்ள மழைநீர் வடிகால்வாயில், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், சேக்குபேட்டை கவரை தெருவில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும்போது நிலைதடுமாறி, பள்ளத்தில் தவறி விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, மதுராந்தோட்ட தெருவில், மழைநீர் வடிகால்வாயில், மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.