சாலையோரம் நின்று கொண்டிருந்த வேன் மீது பைக் மோதி 2 வாலிபர்கள் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருமழிசை அருகே புதுச்சத்திரம் பகுதியில் சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த மினி வேன் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உட்பட இருவர் பலியாயினர். திருமழிசை அடுத்த நேமம் பகுதியை சேர்ந்தவர்கள் கல்லூரி மாணவர் தினேஷ்(21), தனியார் கம்பெனி ஊழியர் பாலாஜி(22). இவர்கள் இருவரும் நேற்று இரவு 10 மணி அளவில் திருவள்ளூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி மது போதையில் இருசக்கர வாகனத்தில் அதி வேகமாக வந்து புது சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மினி வேன் மீது மோதியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் தினேஷ் துடிதுடித்து பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த பாலாஜி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு; அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

அருவியில் நண்பர்களுடன் குளித்தபோது திடீர் வெள்ளத்தில் சிக்கி 3 மருத்துவ மாணவர்கள் பலி: 2 மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை

தண்டவாளத்தில் டெட்டனேட்டர்கள் கிடந்ததால் ராணுவ சிறப்பு ரயில் நிறுத்தம்: ரயில்வே ஊழியர் கைது