இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குறிப்பிடும் இடம் தனியார் பட்டா இடம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திருவாடானையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.