புதிதாக சாலை அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கு : ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி ஊமை உடையான் மடை வரை புதிதாக சாலை அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஊமை உடையான்மடை கிராமத்தில் 500 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் பயன்படுத்த முடியாத வகையில் சாலை உள்ளதாக புகார் எழுந்தது. திருவாடானையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குறிப்பிடும் இடம் தனியார் பட்டா இடம் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. திருவாடானையைச் சேர்ந்த ஜான் பிரிட்டோ என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது