சாலை விதிகளை உறுதியாக அமல்படுத்த புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறோம். விதி மீறுபவர்களுக்கு அபராதத் தொகையையும் அதிகரித்து விட்டோம். ஆனாலும் எந்த பலனும் ஏற்படவில்லை. கடந்த 2019ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தில் ஒன்றிய அரசு திருத்தங்கள் கொண்டு வந்தது. அதன்படி அபராதத் தொகை உயர்த்தப்பட்டது. அதன்பிறகும் சாலைவிதிமீறல்கள் அதிகரித்துதான் வருகின்றன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தலைகவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. 2022ம் ஆண்டு மட்டும் தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் விபத்தில் சிக்கி 50,029 பேர் உயிரிழந்துள்ளனர்’ என்றார்.