பைக் மீது மினிலாரி மோதியதில் ஒருவர் பலி தூக்கிவீசப்படும் காட்சி வைரல்

*பதை,பதைக்க வைத்த சம்பவம்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் பைக்கில் சாலையை கடக்க முயன்றவர் மீது மினி லாரி மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். இந்த விபத்து சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகி வரும் காட்சி பதைபதைக்க வைத்து உள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த கைப்புள்ள என்கிற மாரிமுத்து (45). இவர் பைக்கில் கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது மாரியம்மன் கோயில் ஆர்ச் அருகே பட்டுக்கோட்டை மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அந்தநேரத்தில் முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த மினிலாரி அதிவேகமாக வந்து மாரிமுத்துவின் பைக்கில் மோதியது.இதில் மாரிமுத்து 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். சாலை ஓரத்தில் உயிருக்கு போராடிய அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்து விட்டார்.

இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மாரிமுத்து மீது மினிலாரி மோதிய விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. வேன் பைக்கி மீது மோதிய வேகத்தில் மாரிமுத்து தூக்கி வீசப்படும் காட்சி சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்