எனவே இது தொடர்பாக அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சாலை விபத்து வழக்குகளில் இழப்பீடுகளை தீர்மானிக்க முடியாத நிலை இருப்பதால் ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறியவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். ரத்த மாதிரி எடுப்பது, பரிசோதனை செய்வது உள்ளிட்டவை தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவு என்பதால் ரத்த மாதிரி எடுக்கும் போது, சம்மதம் தேவையா என்ற கேள்வியும் எழக்கூடாது என்றும் தமது சுற்றிக்கையில் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டுள்ளார்.