சென்னை: ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் ஆர்.என்.ரவி செய்கிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டது முதல் அபத்தமான கருத்துகளை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழ்நாட்டின் ஜனநாயக் சக்திகளின் கடுமையான கண்டனத்துக்கு உரியவராக ஆளுநர் இருந்து வருகிறார். ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் அளித்த பேட்டியை பார்க்கும்போது அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை; பாஜக தலைவர் பதவிக்காக வந்தது போல் தெரிகிறது எனவும் கூறியுள்ளார்.