டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேசி உரையாடினார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சூழல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமித்ஷாவுடன் ஆலோசித்தேன். தமிழகத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதி, அவற்றின் தாக்கங்கள் குறித்து பயனுள்ள சந்திப்பாக அமைந்தது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.