ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரியில் மண்டல அளவிலான கைப்பந்து போட்டி

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான கைப்பந்து தொடர் நடைபெற்று வந்தது. இத்தொடரில் சென்னை, ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஆர்.எம்.டி பொறியியல் கல்லூரி அணியும், ஆர்.எம்.கே பொறியியல் கல்லூரி அணியும் விளையாடின. இதில் ஆர்.எம்.டி கல்லூரி அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆர்.எம்.கே.கல்விக் குழுமங்களின் துணைத்தலைவர் கிஷோர் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு சாம்பியன் கோப்பையை வழங்கினார். இரண்டாம் இடம் பிடித்த அணிகளுக்கும் பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது