சென்னை: சென்னை அருகே கவரப்பேட்டை, ஆர்எஸ்எம் நகரில் இயங்கி வரும் ஆர்எம்கே பாடசாலை பள்ளியின் 10ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு ஆர்எம்கே கல்வி குழுமத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கினார். கல்வி குழும துணை தலைவர் ஆர்.எம்.கிஷோர், குழும செயலாளர் எலமஞ்சி பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாடசாலை பள்ளி முதல்வர் சந்திரிகா பிரசாத் ஆண்டறிக்கை வாசித்து வரவேற்றார்.
இவ்விழாவில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்வி குழும ஆலோசகருமான டாக்டர் எம்.எஸ்.பழனிச்சாமி, தமிழ்நாடு கனிமவளத் துறை முன்னாள் இயக்குனரும், கல்வி குழும ஆலோசகருமான வி.மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில், பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆர்எம்கே கல்வி குழுமத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் கோப்பை, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். முடிவில் பள்ளி மாணவர் தலைவர் அங்குர் குமார் நன்றி கூறினார்.