இதனை தொடர்ந்து அவர்கள் கூறுகையில். இல்வச வீட்டுமனை பட்டா கேட்டு 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தாசில்தார்,ஆர்.டி.ஓ. கலெக்டரை பலமுறை சந்தித்து மனு கொடுத்து விட்டோம். இருப்பினும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், எங்களுக்கு அரசின் எந்த ஒரு நலதிட்ட உதவியும் கிடைக்கவில்லை. வீடு கட்டிக்கொள்ளவும் முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். கடந்த 2015ல் இரண்டு கட்டங்களாக 35 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அரசு எங்களுக்கு வழங்க சட்டத்தில் இடமில்லை என்று கூறுவதாக வேதனை தெரிவித்தனர். 20 ஆண்டுகளாக காத்திருக்கும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.