இந்நிலையில் ஒற்றைக் கையில் குருட்டுத்தனமாக சிக்சர்கள் அடிப்பதாக ரிஷப் பண்ட்டை பெரும்பாலானவர்கள் குறைத்து மதிப்பிடுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு பிறந்தவர் என்று பாராட்டும் அஸ்வின் இது குறித்து பேசியது பின்வருமாறு: “ரிஷப் பண்ட் மீண்டும் சதமடித்தது நல்ல உணர்வை கொடுத்தது. முதல் இன்னிங்சிலும் அவர் நன்றாக விளையாடினார். இருப்பினும் சிறப்பாக விளையாடும் அவர் எப்படி அவுட்டானார் என்று ரோகித் சர்மாவிடம் 10 முறை கூறியிருப்பேன். இவர் கிரிக்கெட்டுகாகவே செய்யப்பட்டவர்.
ஒவ்வொரு கோணத்திலும் அவர் கிரிக்கெட்டில் சாதிப்பதற்காக பிறந்தவரைப் போல் தெரிகிறது. மிகவும் வலுவான அவர் அடிக்கும்போது பந்து தூரமாக செல்கிறது.சில நேரங்களில் அவர் ஒற்றைக் கையில் அடிக்கிறார். அனைவரும் அதைப் பார்த்து அவரை குறைத்து மதிப்பிடுகிறார்கள். இருப்பினும் அவரிடம் அந்தளவுக்கு திறன் இருக்கிறது. ரிஷப் பண்ட் அனைத்திற்கும் ஆம் என்று சொல்கிறார். மிகவும் திறமை வாய்ந்த அவர் பந்தை தவிற விடும்போது மீண்டும் இறங்கி வந்து அடிக்கிறார். வங்காளதேச அணிக்கு பீல்டிங் செட்டிங் செய்த அவர் மிகவும் வித்தியாசமான ஜாலியான நபர்” என்று கூறினார்.