ஒருமாதம் கடந்தும் அவர்கள் வீடு திரும்ப முடியாமல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை மணிப்பூர் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் டாக்டர் ஆர்.கே.ரஞ்சன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,’ மணிப்பூர் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், குறிப்பாக பாதிப்புக்குள்ளான பகுதிகளில், மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கலவரத்தின் போது காவல்நிலையங்களை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட 990 ஆயுதங்களும், 13,526 வெடிமருந்துகளும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து 35,000 மெட்ரிக் டன் கட்டுமானப் பொருட்கள், எரிபொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் 2,376 சரக்கு லாரிகளில் மணிப்பூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன’ என்று தெரிவித்தார். இதற்கிடையே மணிப்பூரில் 15ம் தேதி வரை இணைய வசதிமுடக்கப்பட்டு உள்ளது.