சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சந்தீப் கோஷ் உள்பட 5 பேரையும் கைது செய்த சிபிஐ, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் மற்றும் இறந்து கிடந்த பெண் மருத்துவரின் உடலருகே கண்டெடுக்கப்பட்ட புளூடூத் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சந்தீப் கோஷ் உள்பட 5 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்க கோரி சிபிஐ தரப்பில் கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் சந்தீப் கோஷ் மற்றும் 4 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.