சென்னை: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. எஸ்.இ.டி.சி பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்கப்படுகிறது; ஒவ்வொரு மாதமும் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணிகளுக்கு அதிக பயணச்சீட்டு வழங்கும் நடத்துநர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.