சிறப்பு அழைப்பாளராக வருவாய் கிராம ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். பணியில் இருக்கும் கிராம உதவியாளர்கள் இறந்து விட்டால் அந்த குடும்பம் வாழ வழி தெரியாமல் தவிக்கும் என்பதற்காக 1999ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர், கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கினார். தற்போது அந்த உத்தரவு நிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் வழங்க வேண்டும், கடந்த ஜனவரி மாதம் பணிக்கு வந்தவர்களுக்கு பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும் போன்ற 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.