வருவாய் ஆய்வாளர் விபத்தில் மூளைச்சாவு உறுப்புகள் தானம்

நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் மாதவசங்கர் (37). நாங்குநேரி தாலுகா முதுநிலை வருவாய் ஆய்வாளர். கடந்த 13ம் தேதி தாலுகா அலுவலகத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே வந்தவர் மீது பைக் மோதியதில் மாதவ சங்கருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும், கருவிழிகள் மற்றும் ஒரு கிட்னி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு கிட்னி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

Related posts

கேரளாவில் 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை: சட்டசபையில் தகவல்

மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு

மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர் காந்திமதிநாதன் ஓய்வு: வீட்டிற்கு அழைத்து பாராட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்