அதன்பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் மாணவி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் மற்றும் ஆசிரியர்கள் அதனை மறைத்ததாக தெரிகிறது. இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை உள்பட 6 ஆசிரியர்கள் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டிய ஓவிய ஆசிரியர் ராஜ்குமார் கடந்த 2023 டிசம்பர் 22ம் தேதி சஸ்பண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று (30ம் தேதி) ஓய்வுபெற இருந்த தலைமை ஆசிரியை ஜீவா ஹட்சன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.