ஓய்வு பெற்ற டபேதாரை காரின் முன்சீட்டில் அமர வைத்து வீட்டுக்கு அனுப்பிய கலெக்டர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அடப்பன் வயலை சேர்ந்தவர் அன்பழகன்(60). கலெக்டர் அலுவலகத்தில் டபேதாராக 36 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் அன்பழகன் பணி ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்ற நாளில் நடந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அன்பழகனின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் கலெக்டர் கவிதா ராமு முகாம் அலுவலகத்துக்கு அன்பழகன் சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது கலெக்டர் கவிதா ராமு, அன்பழகனை அழைத்து தன்னுடைய காரின் முன் சீட்டில் அமர வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார். கலெக்டரின் இந்த செயல் அன்பழகனின் குடும்பத்தினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்