காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட வலியுறுத்தி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நேற்று முன்தினம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பேரவைச் செயலகம் மூலம் இன்று தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நாளை நடைபெற உள்ளது.