விசிக உயர்நிலைக்குழு கூட்டத்தில் தீர்மானம்; ஆணவ கொலை கட்டுப்படுத்த சிறப்புச்சட்டம் இயற்ற வேண்டும்

சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த சிறப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது . சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

மது மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் ஆணையிட்டவாறு சிறப்புச் சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Related posts

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்