டெல்லி: டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து 2 நாளில் விலகுகிறேன் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கட்சி தொண்டர்களிடையே பேசினார். சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்துகிறது. 2013 டிசம்பர் 28-ல் ஆம் ஆத்மி கட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு முதல்முறையாக டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் பதவி ஏற்றார்.