அதனை தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக செயல்படாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பது வெளிப்படையான உண்மை. பின்னர் எல்லை நிர்ணயம் செய்வதற்கும் பல ஆண்டுகள் ஆகும். அதன் பின் தான் இட ஒதுக்கீடு மசோதா செயல்படுத்தப்படும். மசோதாவை நடைமுறைப்படுத்துவதை தாமதிக்கும் விதிகளை அரசு கைவிட வேண்டும்” என்றார்.