அப்போது எதிர்பாராதவிதமாக தவறி தண்ணீர் அதிகமிருந்த அந்த தொட்டியில் விழுந்து தத்தளித்துள்ளது. இதனை கண்ட தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் சிலர் திருமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் கீழக்கோட்டை கிராமத்திற்கு சென்று தனியார் தோட்டத்து தொட்டியில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்த ஆண் மயிலை மீட்டனர். பின்னர் திருமங்கலம் வனத்துறையில் மயிலை ஒப்படைத்தனர்.