இதனையடுத்து குறிப்பிட்ட அந்த 4 கடைகளில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேர் மற்றும் ராஜஸ்தான், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு, ராயபுரத்தில் உள்ள சிறுவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு பிரிவினர் வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய காவல் நிலையங்களில் கடை உரிமையாளர்கள் மீது புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகையையொட்டி இதே பகுதியில் பா.ஜ நிர்வாகிக்கு சொந்தமான துணிக் கடையில் சோதனை மேற்கொண்டு 4 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.