நாளை குடியரசு தின விழா: கலெக்டர் அலுவலக வளாகத்தில்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில் நாளை 26ம் தேதி காலை 8.05 மணியளவில் குடியரசு நாள் விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொள்ள உள்ளார். மேலும், விடுதலைப் போராட்டத் தியாகிகள் கௌரவிக்கப்பட்டு, அரசின் நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இதனைத் தொடர்ந்து குடியரசு நாள் விழாவினை சிறப்பிக்கும் பொருட்டு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெறும் குடியரசு நாள் விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!