சென்னை: நாடு முழுவதும் இன்று 75வது குடியரசு தின விழா கோலாகலம். டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும், சென்னையில் ஆளுநர் ரவிவும் மூவர்ணத் தேசிய கொடியினை ஏற்ற உள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி அலுவலகம், சென்ட்ரல் ரயில் நிலையம், அண்ணாசாலை தபால் நிலையம், வருமான வரித்துறை அலுவலகம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.