அந்த வழக்கு நாளை (இன்று) தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது என்றார். மனுதாரர் கே.பாலு, முதலில் விஷ சாராயம் குடித்தவர்கள் இறந்த நிலையில், மாவட்ட கலெக்டரின் தவறான அறிவிப்பால் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் காவல் துறை உயர் அதிகாரிகள் தொடர்பும் உள்ளது என்றார். இதையடுத்து, அதிமுக தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரணைக்கு பட்டியலிடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்குகள் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.