மதுரை: குரூப்-1 தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சீலிட்ட கவரில் லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. 2019-ல் குரூப்-1 தேர்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான 20% இடஒதுக்கீட்டு சலுகையில் முறைகேடு என வழக்கு தொடர்ந்தனர். தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்று அளித்த 5 பேர் கண்டறியப்பட்டுள்ளதாக காமராஜர் பல்கலை. தரப்பு அறிக்கை சமர்ப்பித்தது. இதே போல் அனைத்து பல்கலைக்கழங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தலாமே என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.