குறிப்பாக சென்னை அருகே உள்ள செங்குன்றம் நாராவாரிகுப்பம் பேரூராட்சி அலுவலக கட்டிடத்தின் மேலே பெயர் பலகை பராமரிப்பில்லாமல் உள்ளது. இதேபோல் பல்வேறு அரசு கட்டிடங்களிலும் தமிழ் வாழ்க மின்னொளி பெயர் பலகை இரவில் ஒளிராமல், எழுத்துகள் சிதைந்தும் காணப்படுகிறது.
எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ள தமிழ் வாழ்க மின்னொளி பெயர் பலகையை சீரமைத்து ஒளிரச் செய்யவும், பெயர் பலகை வைக்காத அரசு அலுவலகங்களில் புதிதாக தமிழ் வாழ்க மின்னொளி பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று செங்குன்றம், புழல் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.