இதனிடையில் பாபு, வழக்கறிஞர் உதவியுடன் வீட்டின் உரிமையாளர்கள் பேசி கால அவகாசம் வாங்கிய நிலையில், கடந்த 6 மாத காலமாக வாடகை செலுத்தவில்லை. இதனால், பலமுறை வீட்டினை காலி செய்யுமாறு கூறியும், வீட்டினை காலி செய்ய மறுத்த நிலையில், நேற்று காலை 6 மணியளவில் கட்டுமான உதவியாளர் 10 நபர்களுடன், வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை உடைத்து எடுத்து இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சடைந்த குடியிருப்பு வாசிகள் காவல்துறையின் அவசர உதவியான 100 அழைத்து புகார் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காஞ்சிபுரம் தாலுகா போலீசார், காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வீட்டிலுள்ள நபர்களை பாதுகாப்பாக அழைத்துவர முயன்றனர்.
அப்போது, வீட்டைவிட்டு வெளியேற குடும்பத்தினர் மறுத்து வருவதால், காவல்துறையினிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கூறுகையில், பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளியை கவனிக்க அதிகளவு பணம் செலவழித்த நிலையில் விரைவாக தந்து விடுவதாக கூறிய நிலையில், இதுபோன்ற அராஜக செயல் ஈடுபட்டு தற்போது குடிநீர் கூட குடிக்க இயலாத நிலையில் வீட்டில் முடங்கி கிடப்பதாகவும், பள்ளி செல்லும் மாணவர்கள் கூட பள்ளிக்கு செல்லாமல் காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இதுகுறித்து வீட்டு உரிமையாளர் சீனிவாசனை தொடர்பு கொண்டபோது, அவர் தொடர்புகொள்ள முடியவில்லை. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.