அங்கு நரசவேணிக்கு டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது அவரது பித்தப்பையில் ஏராளமான கற்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றால் இளம்பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உடனடியாக அவற்றை பித்தப்பையுடன் சேர்த்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இளம்பெண்ணின் பித்தப்பையில் மொத்தம் 570 கற்கள் இருந்தன. அவற்றை பித்தப்பையுடன் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை 5க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் இளம்பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.