டெல்லி: நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பட்டியலில் இருந்து தமிழ்நாட்டை நீக்கி ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட உள்ள இடங்களின் புதிய பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை. டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணி கைவிடப்படுவதாக ஏற்கனவே ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.