கட்சியை விட்டு நீக்கம் எடப்பாடிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய ஏ.வி.ராஜூ

சென்னை: தன்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென்று அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூவை நீக்குவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில், இதுதொடர்பாக ராஜூ அவரது வழக்கறிஞர் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், என்னை நீக்குவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் கட்சி விரோத நடவடிக்கை என்ன என்று விளக்கப்படவில்லை. என்னை கட்சியில் இருந்து நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

பேப்பர் கிடங்கில் தீ விபத்து

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் அச்சம்

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு