டெல்லி: ரெமல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேற்குவங்கம் – வங்கதேசம் இடையே இன்று நள்ளிரவில் ரெமல் புயல் கரையை கடக்கிறது, புயல் கரையை கடக்கும்போது 135 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.