மத வெறுப்புணர்வு பதிவு: பாஜ பிரமுகர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்தவர் கதிரவன் (35). இவர் பாஜ மண்டபம் கிழக்கு ஒன்றிய தலைவராக உள்ளார். இவர் இரு மதங்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் வகையில் கடந்த 3ம் தேதி சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டதாக, தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரகுமான் மண்டபம் போலீசில் புகார் அளித்தார். அதனடிப்படையில் மண்டபம் போலீசார் கதிரவன் மீது வழக்கு பதிந்து நேற்று அவரை கைது செய்தனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்