மதமோதல் தூண்டும் வகையில் 2வது முறை பதிவு; சமூகவலை தளத்தில் இருந்து பாஜ பிரமுகர் வெளியேறணும்: ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த பாஜ பிரமுகர் கதிரவன். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘ராமநாதபுரம் மாவட்டம் அதியமான் பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த மாதம் இஸ்லாமிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனை அவதூறாக முகநூல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கூறி, மண்டபம் பகுதியைச் சேர்ந்த முகமது ஹாலிக் என்பவர் கொடுத்த புகாரில், என் மீது மண்டபம் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மனுதாரர் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் இதுபோன்று இரண்டாவது தடவையாக பதிவிட்டுள்ளார். மனுதாரர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராகவும் உள்ளார். எனவே இதுபோன்ற பதிவுகளை இனி பதிவிட மாட்டேன் என்றும், சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிக் கொள்வதாக உத்தரவாத பத்திரத்தை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, மனுதாரருக்கு மேலும் பல நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Related posts

பில்லி சூனியம், செய்வினை சிறப்பாக செய்வார்; அதிமுக மாஜி எம்எல்ஏ பற்றி பரபரப்பு போஸ்டர்

ஈரானின் கிழக்கு பகுதியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழப்பு

ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 1413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்