ஆனால் இந்து மதத்தை கொண்டு அதன் பெயரால் ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்களிடையே பிரிவினையை உருவாக்கி இழிவான சில் காரியங்களை விதைத்தார்கள். இதைத்தான் திராவிடம் எதிர்க்கிறது. இதன் அடிப்படையிலேயே தான், இதுபோன்ற கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அவர், இந்துக்களுக்கு எதிரி அல்ல, இந்து மதத்திற்கு எதிரி அல்ல. இந்து மக்களை ஒழிக்க வேண்டும் என்று பேசியது போல் நாடு முழுவதும் தவறான கருத்தை இந்துத்துவா சக்திகள் உருவாக்குகிறார்கள். மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும். 2024 தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக இதுபோன்ற குறுக்கு வழியை கையாளுகிறார்கள். இதை விட இன்னும் மோசமாக செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.