அதேபோல் பூண்டி ஒன்றியம், மோவூர் ஊராட்சி, கன்னியம்மன் நகரில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பின் விளைவாக பழங்குடியின மக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய், வாழைப்பழம் ஆகிய நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஐஆர்சிடிஎஸ் நிர்வாக இயக்குனர் பி.ஸ்டீபின் 25 குடும்பங்களுக்கு வழங்கினார்.