டெல்லி: டெல்லியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ள நீரில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.