திருமலை: திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை தாக்கியதில் இறந்த சிறுமி வட்ஷித்தா குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமன கருணாகர் ரெட்டி அறிவித்துள்ளார். தேவஸ்தானம் சார்பில் ரூ.5 லட்சம், வனத்துறை சார்பில் ரூ. 5 லட்சம் என ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார்.