சென்னை: திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏரியில் சிறுவர்கள் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் எனவும் கூறினார்.